புதுக்கடை அருகே தாய் 2 பெண் குழந்தைகளுடன் மாயம்

புதுக்கடை அருகே தாய் 2 பெண் குழந்தைகளுடன் மாயம்

புதுக்கடை அருகே தாய் 2 பெண் குழந்தைகளுடன் மாயம்

புதுக்கடை அருகே தாய் இரண்டு பெண் குழந்தைகள் மாயமான நிலையில் கணவன் போலீசாரிடம் புகார்.
குமரி மாவட்டம் புதுக்கடை அருகேபார்த்திபபுரம், பன விளாகம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் (43) ஒர்க் ஷாப்பில் வேலை செய்கிறார். இவரது மனைவி செல்வராணி (33). இந்த தம்பதியினருக்கு 4-ம் வகுப்பு படிக்கும் லட்சுமிபிரியா என்ற மகளும், 1-ம் வகுப்பு படிக்கும் விஷ்ணுபிரியா என்ற மகள் என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். செல்வராணி அதிகமாக கடன் வாங்கி செலவு அதிக செய்வதாக கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று செல்வராணி தனது இரு பெண் குழந்தைகளுடன் வீட்டில் இருந்து மாயமாகி உள்ளார். மனைவி பிள்ளைகளை பல இடங்களில் தேடியும் அவர்கள் தொடர்பான தகவல் கிடைக்கவில்லை. எனவே மனைவி பிள்ளைகளை கண்டுபிடித்து தர லாரன்ஸ் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராணி தனது குழந்தைகளுடன் என்ன காரணத்துக்காக மாயமானார் என விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story