கடை,கடையா இரட்டை இலைக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

கடை,கடையா இரட்டை இலைக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

வாக்கு சேகரிப்பு 

சீர்காழியில் மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் பாபு வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 -ம் தேதி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் களத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக நேரடியாக களம் காணுகிறது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரசும், நாம் தமிழர் கட்சி தனித்தும், பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் அக்கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒன்றாக மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீர்காழி கடைவீதியில் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு கேட்டார்.

Tags

Next Story