மயிலாடுதுறை : சிறுத்தை அரியலூருக்கு சென்றதா ?

மயிலாடுதுறை : சிறுத்தை அரியலூருக்கு சென்றதா ?

சிறுத்தை 

அரியலூரில் தென்பட்டது மயிலாடுதுறயில் நடமாடிய சிறுத்தை தானா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் கடந்த ஒன்பது நாட்களாக சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கண்காணிப்பு கேமரா உதவியுடன் வனத்துறை அதிகாரிகள் அதனை உறுதி செய்தனர். தொடர்ந்து மயிலாடுதுறை பொதுமக்கள் இனி சிறுத்தை குறித்து அச்சப்பட வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வனத்துறையினர் கூறுகையில் மயிலாடுதுறையில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் புகைப்படத்தைபோல் அரியலூரில் நடமாடும் சிறுத்தையின் புகைப்படம் எடுத்து பொருத்தி பார்த்த பிறகு தான் ஒரு முடிவுக்கு வர முடியும் என நாகை மாவட்ட உயிரின வனக்காப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story