மயிலாடுதுறை : மின்சாரம் தாக்கி ரவுடி பலி

மயிலாடுதுறை : மின்சாரம் தாக்கி ரவுடி பலி

மகி (எ)மகேந்திரன் 

மயிலாடுதுறை மாவட்டம் ஆறுபாதி ஊராட்சி மேட்டிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் மகி என்கிற மகேந்திரன் (50). இவர் நேற்று இரவு தனது வீட்டு மாடியில் பெய்த தேங்கிய மழை நீரை இரும்பு கம்பி கொண்டு அகற்றி சுத்தம் செய்துள்ளார். அப்போது அவர் கையில் வைத்திருந்த கம்பி எதிர்பாராத விதமாக மின்கம்பியில் உரசியது. இதனால் உடலில் மின்சாரம் பாய்ந்ததில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகினர். மகி என்கிற மகேந்திரன் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story