பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கிய மேயர்

பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கிய  மேயர்
சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகளை மாநகராட்சி மேயர் பிரியா வழங்கினார்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆசிரியர் தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் வழங்கினார். இந்நிகழ்வின் போது, துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் இராமலிங்கம் ,நிலைக்குழுத் தலைவர்கள் விசுவநாதன் (கல்வி) , கோ.சாந்தகுமாரி (பொது சுகாதாரம்), இராயபுரம் மண்டலக்குழுத் தலைவர் ஸ்ரீராமுலு , மாமன்ற உறுப்பினர்கள் மதிவானன் சுப்பிரமணி கல்வி அலுவலர் வசந்தி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story