திருப்பூர் மாநகராட்சி அரசுபள்ளியில் கழிப்பறைகளை திறந்து வைத்த மேயர்

திருப்பூர்மாநகராட்சி அரசுபள்ளியில் கட்டிமுடிக்கப்பட்ட கழிப்பறைகளை மேயர் தினேஷ்குமார் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாநகராட்சியின் வளர்ச்சியில் பெரிதும் பங்காற்றி வரும் ரோட்டரி சங்கங்கள்,காந்தி நகர் ரோட்டரி,திருப்பூர் தெற்கு ரோட்டரி மற்றும் திருப்பூர் ஆனந்தம் ரோட்டரி இணைந்து "சுபிக்ஷா" எனும் திட்டத்தின் கீழ்,மண்டலம் -1, வார்டு -9 V.K அரசு மேல்நிலைப் பள்ளியில் 28.6.2023 அன்று பெண்கள் கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது.

கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இன்று 11.12.2023 திறப்பு விழா நிகழ்வில் வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்கள் கலந்து கொண்டு கழிவறைகளை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர் ராமதாஸ் அவர்களும், மண்டல தலைவர் உமாமகேஸ்வரிவெங்கடாஜலம் அவர்களும், வட்ட கழக செயலாளர் ஸ்ரீதர் அவர்களும், கோட்டா பாலு அவர்களும், ரோட்டரி சங்க நிர்வாகிகளும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story