புதிய நியாயவிலைக் கடையை திறந்து வைத்த மேயர்

திருப்பூரில் புதிய ரேசன் கடையை மேயர் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாநகராட்சி 3-வது வார்டு ஜி.எம் நகர் பகுதியில் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் , துணை மேயர் பாலசுப்ரமணியம் , மண்டல தலைவர் கோவிந்தராஜ் , பகுதி கழகச் செயலாளர் ஜோதி அவர்களும், மாமன்ற உறுப்பினர் லோகனாயகி கருப்பசாமி , வட்ட கழக செயலாளர் மூர்த்தி மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story