தூத்துக்குடியில் வடிகால் பணிகள் - மேயர் ஆய்வு

தூத்துக்குடியில் வடிகால் பணிகள் - மேயர் ஆய்வு

தூத்துக்குடியில் வடிகால் பணிகளை மேயர் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கருத்த பாலம் மற்றும் போல்பேட்டை பகுதியில் நடைபெறும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கருத்த பாலம் மற்றும் போல்பேட்டை பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கருத்த பாலம், போல்பேட்டை பகுதியில் ஆரம்பமாகப் போகும் வடிகால் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மழை வெள்ள நீரின் பொழுது உடைக்கப்பட கருத்த பாலம் அருகில் உள்ள தனியார் இடத்தில் தற்காலிகமாக திறந்து விடப்பட்ட பாதையின் அருகில் மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப மின் விளக்குகள் அமைத்து தரப்படும் என்று உறுதியளிக்கிறேன் என்றார். ஆய்வின்போது, திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், சமூக ஆர்வலர் ஜசக், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.

Tags

Next Story