வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட செல்வநாயகபுரம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகள், கருத்த பாலம் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் மற்றும் சாலை அகலப்படுத்தும் பணிகள், போல்பேட்டை, செயின்ட் மேரிஸ் காலனி மற்றும் லூர்த்தம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய வடிகால் மற்றும் கல்வெட்டு பணிகள், கிருஷ்ணராஜபுரம் பிரதான சந்திப்பு பகுதியில் ஆரம்பமாகப் போகும் வடிகால் இணைப்பு உள்ளிட்ட பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி இன்று காலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில் செல்வநாயகபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடிகள் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகள் நடைபெற்றதாலும் பழைய கட்டிடமாக இருப்பதாலும் அருகில் உள்ள இடத்திற்கு புதியதாக மாற்றவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார். அப்போது மண்டல தலைவர் தொ.நிர்மல்ராஜ் மாமன்ற உறுப்பினர் திரு.தெய்வேந்திரன் வட்ட கழக செயலாளர்களும் முன்னாள் மாமன்ற உறுப்பினர்களுமான ரவீந்திரன், ராஜாமணி வட்ட கழக பிரதிநிதி பேச்சிமுத்து, மாவட்ட தொண்டரனி துணை அமைப்பாளர் திரு.ராமர் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story