ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் மேயர் ஜெகன் ஆய்வு

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில்  மேயர் ஜெகன் ஆய்வு

மேயர் ஆய்வு 

தூத்துக்குடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி டீச்சர்ஸ் காலனி பகுதியில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அகற்றடப்பட்ட ஆக்கிரமிப்புகள், மில்லர்புரம் பகுதியில் பணிகள் நிறைவடைந்த புதிய தார் சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். மேலும், பக்கிள் ஓடையில் சாலையை ஆக்கிரமித்து பொருட்கள் மற்றும் வாகனங்களை நிறுத்தியுள்ளதாக பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரினையடுத்து அதனையும் அப்புறப்படுத்துமாறு அறிவுறுத்தினார். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், மண்டல தலைவர் தொ.நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் பொன்னப்பன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வின், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.

Tags

Next Story