புதிய தார் சாலைப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!

புதிய தார் சாலைப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!

ஆய்வு செய்த மேயர்

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 4ஆம் கேட் வரை நடைபெற்று வரும் புதிய தார் சாலைப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்திற்குட்பட்ட வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் நடைபெற்று வரும் அகலப்படுத்தும் பணி, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நான்காம் கேட் வரை நடைபெற்று வரும் புதிய தார் சாலைப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி அய்வு செய்தார்.

மேலும், ஓட்டப்பிடாரம் அதனைச் சார்ந்த பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்துவதற்கான இடம் வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் சங்கத்தின் கோரிக்கையினையடுத்து உழவர் சந்தைக்கு பின்புறம் பேருந்துகளை நிறுத்துவதற்கு உடனடியாக இடவசதி செய்து நடவடிக்கை மேற்கொண்டார். ஆய்வின்போது,

பேருந்து நிலைய கடை வியாபாரிகள் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story