உழவர் சந்தை பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

உழவர் சந்தை பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

மேயர் ஆய்வு 

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் - உழவர் சந்தை பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துகள் நிறுத்துவதற்கென்று உழவர் சந்தையின் பின்புற வாசலுக்கு எதிர்புறம் இடம் ஒதுக்கி மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்பாடு செய்தார். இந்நிலையில் அந்த இடத்தில் பெயர் எழுதுவதற்கான பணிகளை மேயர் இன்று ஆய்வு செய்தார்.

அப்பொழுது அப்பகுதி மக்கள், உழவர் சந்தைக்கு பின்புறமுள்ள பகுதியில் நடந்து செல்வதற்கு தடையாக கற்கள் இருப்பதாகவும் பேருந்து வரும் போது ஓரத்தில் நடந்து செல்வதற்கு மரக் கிளைகள் இடையூராக இருப்பதாகவும் உழவர் பெருமக்களும் பொதுமக்களும் கூறினார்கள்.

இதையடுத்து உடனடியாக மரக்கிளைகளை பேருந்துகளும் பொதுமக்களும் செல்வதற்கும் ஏற்றவாறு ஒதுக்கி கொடுக்க மேயர் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் இடைஞ்சலாக உள்ள கற்களை அகற்றியும் வரும் நாட்களில் அந்த இடத்தில் பேவர் கற்கள் பதித்து தரப்படும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, திமுக வட்ட செயலாளர் ராஜாமணி, உழவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story