மக்களின் கோரிக்கை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை !

மக்களின் கோரிக்கை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை !

 மேயர் ஜெகன் பெரியசாமி 

தூத்துக்குடி மாநகராட்சியில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, பல்வேறு திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளைச் திமுகவை சேர்ந்த சேர்ந்த வட்டச் செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் வட்ட பிரதிநிதிகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை நேரடியாக கேட்டு நிறைவேற்றும் வகையிலான கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடி கீதா ஹோட்டல் வளாகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. முதல் கட்டமாக 10 வார்டுகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் திமுக வட்டச் செயலாளர் வட்ட பிரதிநிதிகள் பகுதி சபா உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பெண்கள் தங்கள் பகுதியில் தார் சாலை மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு தற்போது பகுதிகளில் மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்காக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு தங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் தங்கள் பகுதியில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் இருசக்கர வாகனத்தில் சாலையில் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது ஆகையினால் தங்கள் பகுதியில் வேக தடை அமைக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story