நாகர்கோவிலில் கணிணி வரி வசூல் மையம் மேயர் திறந்தார்

நாகர்கோவிலில் கணிணி வரி வசூல் மையம் மேயர் திறந்தார்
கணிணி வசூல் மையம் திறந்த மேயர்.
உறுப்பினர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் வரி வசூல் செய்வதற்கு தற்போது ஒன்பது இடங்களில் கணினி வரி வசூல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பெருவிளை சுற்றுவட்டார பகுதி மக்கள் வரி செலுத்தும் வகையில் இன்று காலையில் கணினி வரி வசூல் மையம் திறக்கப்பட்டது. இதனை மாநகராட்சி மேயர் மகேஷ் திறந்து வைத்தார். ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர் கவுன்சிலர்கள் தங்கராஜா, அமலசெல்வன், திமுக பகுதி செயலாளர் ஷேக் மீரான், திமுக இளைஞரணியை சேர்ந்த அகஸ்தீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story