ரிப்பன் மாளிகையில் தேசிய கொடியேற்றிய மேயர் பிரியா

ரிப்பன் மாளிகையில் தேசிய கொடியேற்றிய மேயர் பிரியா

மேயர் பிரியா 

குடியரசு தின விழாவையொட்டி சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மேயர் பிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
குடியரசு தின விழாவினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயர் பிரியா தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். பின் சென்னை பள்ளி மாணவ, மாணவியரின் கண்கவரும் கலைநிகழ்ச்சியினை கண்டுகளித்தார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையாளர்கள் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், லலிதா, (வருவாய் (ம) நிதி), இணை ஆணையாளர் (பணிகள்) சமீரன், துணை ஆணையாளர் (கல்வி) திருமதி ஷரண்யா அறி, வட்டார துணை ஆணையாளர்கள், அமித் (தெற்கு), பிரவீன் குமார், (மத்தியம்), கட்டா ரவி தேஜா, (வடக்கு), மண்டலக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story