தேசியக்கொடி ஏற்றிய மேயர்

தேசியக்கொடி ஏற்றிய மேயர்

75வது குடியரசு தினத்தை ஒட்டி சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தேசிய கொடி ஏற்றினார்

75வது குடியரசு தினத்தை ஒட்டி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தேசிய கொடி ஏற்றினார்

75வது குடியரசு தினவிழாவையொட்டி சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் முன்னிலையில், மேயர் ராமச்சந்திரன் இன்று காலை 8.05 மணிக்கு மூவர்ண தேசியக்‌ கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் மரியாதையை ஏற்றுக்‌ கொண்டார். பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு வண்ண பலூன்களையும் பறக்க விட்டார்.

நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயமும், மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண பணியில் ஈடுபட்ட சிறந்த பணியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பொதுசேவை புரிந்த பிரமுகர்களுக்கு சான்றிதழ் கேடயம் வழங்கி கவுரவித்தார். அதனைத் தொடர்ந்து குகை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags

Next Story