கொசு ஒழிப்பு பணிகளை துவக்கி வைத்த மேயர்

சென்னை மாநகராட்சி 74வது வார்டு அலுவலகத்தில் கொசு மருந்து தெளித்தல் மற்றும் புகைபரப்பும் பணியினை மாநகராட்சி மேயர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பெருநகர சென்னை மாநகராட்சி திரு. வி. க. நகர் மண்டலம், 74வது வார்டு அலுவலகத்தில் கொசு மருந்து தெளித்தல் மற்றும் புகைபரப்பும் பணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், மத்திய வட்டார துணை ஆணையர் பிரவீன் குமார் மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், மாநகர நல அலுவலர் ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story