புதிய தார் சாலை போடும் பணி:மேயர் ஆய்வு!

புதிய தார் சாலை போடும் பணி:மேயர் ஆய்வு!

சாலை பணியை ஆய்வு செய்த மேயர் 

மாநகராட்சி பகுதியில் தார் சாலை போடும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நான்காம் கேட் வரை செல்லும் பாதையில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளையும் எட்டையாபுரம் ரோட்டில் மழைநீர் வடிகாலுக்குள் செல்வதற்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக இருக்கும் மணல் திட்டுகளை அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள வணிக நிறுனங்கள் மற்றும் வீடுகளுக்கு முன்பாக சாலையை விட உயரமாக மணல் மற்றும் கற்களை போக்குவரத்திற்கும் வடிகாலுக்குள் நீர் செல்வதற்கு தடையாகவும் இது போன்று உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Tags

Next Story