கோமாரி நோய் தடுப்பு ஊசி சிறப்பு முகாம் - அமைச்சர் துவக்கி வைப்பு

கோமாரி நோய் தடுப்பு ஊசி சிறப்பு முகாம் -  அமைச்சர் துவக்கி வைப்பு

முகாமை துவக்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு 

மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி ஊராட்சியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் மற்றும் வாய் நோய்க்கான தடுப்பு ஊசி சிறப்பு முகாமை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருவாசி ஊராட்சியில்ல் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கோமாரி நோய் மற்றும் வாயு நோய்க்கான தடுப்பு ஊசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ. கதிரவன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மரு.கணபதி மாறன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் மருத்துவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story