மழைநீர் வீடுகளுக்குள் புகாமல் இருக்க நடவடிக்கை - அமைச்சர் முத்துசாமி

மழைநீர் வீடுகளுக்குள் புகாமல் இருக்க நடவடிக்கை - அமைச்சர் முத்துசாமி
 அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு 

ஈரோட்டில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக ஓடையில் அடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள மல்லி நகர் அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் உள்ள வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. இதையடுத்து ஓட்டையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.பின்னர்.ஓடைகளில் உள்ள அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.மேலும் நிரந்தர தீர்வாக ஓடையில் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவு தூர்வாரவும் மற்றும் தரைப்பாலத்தை உயர்த்தி கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்.என்றார்.

Tags

Next Story