மதுரையில் இறைச்சி விற்பனைக்கு தடை

மதுரையில் இறைச்சி விற்பனைக்கு தடை

பைல் படம் 

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுரையில் இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளில் தமிழக அரசின் அரசாணை 16. 01. 2024 (செவ்வாய்க்கிழமை) அன்று அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. மேற்கண்ட கடைகளை திறந்து வைக்கவும் கூடாது, மீறி செயல்படுபவர்களின் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதாரப் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகராட்சியால் அறிவிப்பு வெளியீடப்பட்டுள்ளது.

Tags

Next Story