பவானி ஆற்றில் மூழ்கி மெக்கானிக் பலி

பவானி ஆற்றில் மூழ்கி மெக்கானிக் பலி

பைல் படம் 

சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி மெக்கானிக் உயிரிழந்தார்.

சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி மெக்கானிக் பலி திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள காசி கவுண்டன்புதூரைச் சேர்ந்த திருமூர்த்தி அவருடைய மனைவி மலர்விழி இவர்களுடைய மகன் நவீன் வயது 23 இவர் இருசக்கர வாகன ஒர்க் சார்பில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் கொடிவேரி அணைக்கு குளிக்க வந்துள்ளார் அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் சத்தியமங்கலம் அடுத்த அரசூரில் உள்ள பவானி ஆற்றுக்கு அவர்கள் அனைவரும் குளிக்க சென்றுள்ளனர் .

ஆற்றிலிருந்து குளித்து கொண்டிருந்தபோது ஆற்றின் ஆழமான பகுதிக்கு நவீன் சென்றுள்ளார் இதில் அவர் ஆற்றில் மூழ்கினர் குளித்து கொண்டிருந்த நவீன் திடீரென காணாமல் போனதை கண்டு நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர் உடனே இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பெயர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய நவீனை தேடும் பணியில் ஈடுபட்டனர் இரவு வெகு நேரமாகியும் நவீன கண்டுபிடிக்க முடியாததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆற்றில் நவீனை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர் இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags

Next Story