காஞ்சிபுரத்தில் வரும் 28 வரை இயந்திர பறவைகள் கண்காட்சி

காஞ்சிபுரத்தில் வரும் 28 வரை இயந்திர பறவைகள் கண்காட்சி

இயந்திர பறவை கண்காட்சி

காஞ்சிபுரத்தில் நடைபெறும் பொருட்காட்சி நாளையுடன் நிறைவு பெற உள்ளது.
காஞ்சிபுரம் காமராஜர்வீதியில், சித்தீஸ்வரர் மஹால் எனப்படும் பழைய கே.பி.கே.ரத்னா பாய் திருமண மண்டபத்தில், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பொருட்காட்சி நடந்து வருகிறது. இதில், இயந்திர பறவைகளின் சரணாலயம், பேய் வீடு, பன் சிட்டி 4 டி ஷோ மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், பேன்ஸி பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் இடம் பெறுகிறது. இதுகுறித்து பொருட்காட்சி ஒருங்கிணைப்பாளர் சவுந்தரபாண்டியன் கூறியதாவது:கடந்த டிச., 25 முதல், காஞ்சிபுரத்தில் பொருட்காட்சி நடக்கிறது. மாலை 5:00 மணி முதல், இரவு 9:30 மணி வரை நடக்கும் இப்பொருட்காட்சி வரும் 28ல் நிறைவு பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story