மருத்துவ முகாம்!

மருத்துவ முகாம்!

திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் சிகரங்கள் அறக்கட்டளை சார்பில் 80வது மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் சிகரங்கள் அறக்கட்டளை சார்பில் 80வது மருத்துவ முகாம் நடைபெற்றது.

சிகரங்கள் அறக்கட்டளையின் 80வது முகாம்.கே.செட்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளி தாராபுரம் ரோட்டில் நடந்தது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 42 யூனிட்டுகள் ரத்தம் பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டது.

மேலும் திருப்பூர் ஐ ஃபவுண்டேஷன் இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாமில் 84 பேர் கலந்து கொண்டு இலவச பரிசோதனை மேற்கொண்டு பயன்பெற்றனர். இதில் 14 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் திருப்பூர் ரேவதி மருத்துவமனை மூலம் பொது மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களில் 67 நபர்கள் சர்க்கரை அளவு ரத்த அழுத்தம் மற்றும் இருதய பரிசோதனை செய்து கொண்டு பயன்பெற்றனர். 27 நபர்கள் இலவச பல் பரிசோதனை செய்து கொண்டனர்.

Tags

Next Story