சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம்

மருத்துவ முகாம் 

பரமத்தி வேலூரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது.

வேலூர், பரமத்தி, நல்லூர், கபிலர்மலை அரசு சித்த மருத்துவ பிரிவுகள் மற்றும் அம்மையப்பர் அருட்பணி அறக்கட்டளையினர் இணைந்து நடத்திய மாபெரும் இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாம், பரமத்திவேலூர், மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. முகாமில் வேலூர் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு டாக்டர் பர்வேஸ் பாபு தலைமையில் கபிலர்மலை, பரமத்தி, நல்லூர் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா பிரிவு டாக்டர்கள் சித்ரா, சிவகாமி, கோகிலா ஆகியோர் சியாக்கை இலக்கணம், யோகப் பயிற்சிகள், சிரதாரை சிகிச்சை, மண் சிகிச்சை, வாழை இலை குளியல், நசியம், கலிக்கம், தொக்கணம், ஒற்றடம், புறவளையம், நேதி சிகிச்சை, பிராணாயாம சிகிச்சை மற்றும் நவரக்கிழி உள்ளிட்ட சிகிச்சைகள் சித்த மருத்துவர்கள் முலம் பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

இலவச மருத்துவ முகாமில் பரமத்திவேலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட பயன்பாடுகள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வேலூர் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மற்றும் அம்மையப்பர் அருட்பணி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

Tags

Next Story