தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

மருத்துவ முகாம் 

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம்,நந்திவரம்- - கூடுவாஞ் சேரி நகராட்சி, குப்பை சேகரிக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம் நடத்துவதற்கான முயற்சியில், நகராட்சி கமிஷனர் தாமோதரன், நகராட்சி சுகாதார அலுவலர் நாகராஜன், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் ஆகியோர் ஈடுபட்டனர்.

அதன் விளைவாக,எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில்,நகராட்சி அலுவலகவளாகத்தில், நேற்று காலை இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.

அதில், துாய்மை பணியாளர்களுக்கு, ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, கண், இதயம் போன்ற பல்வேறுவிதமான நோய்களுக்கும், இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story