மருத்துவ மாணவி தற்கொலை: பயிற்சி டாக்டருக்கு சம்மன்

மருத்துவ மாணவி தற்கொலை: பயிற்சி டாக்டருக்கு சம்மன்
சுகிர்தா

குமரி மாவட்டம் குலசேகரம் மூகாம்பிகா கல்லூரியில் படித்து வந்த தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவ மாணவி சுகிர்தா விடுதியில் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி பேராசிரியர் பரமசிவம், பயிற்சி மாணவர் ஹரீஷ், மாணவி ப்ரீத்தி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பேராசிரியர் பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.போலீசுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஹரீஸ், ப்ரீத்தி ஆகியோரை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் இருவரும் முன் ஜாமீன் பெற்றனர். தற்போது பயிற்சி மாணவர் தூத்துக்குடியை சேர்ந்த ஹரீசை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வருகிற 7-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.

மாணவி சுகிர்தா தற்கொலை குறித்த விவரங்கள் மற்றும் அவர் எழுதி வைத்திருந்த கடிதங்கள் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ப்ரீத்தியிடம் அடுத்த கட்டமாக விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags

Next Story