ஊத்தங்கரை கல்லூரியில் தியான பயிற்சி முகாம்

ஊத்தங்கரை கல்லூரியில் தியான பயிற்சி முகாம்

தியான பயிற்சி முகாம் 

ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தியான பயிற்சி முகாம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்று நாள் தியான பயிற்சி முகாம் நடைபெற்றது முகாமிற்கு கல்லூரி முதல்வர் விஜயன் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார் ஹார்ட் புல் லென்ஸ் தியானப் பயிற்சி அமைப்பு மூலம் தியானப் பயிற்சி முகாம் நடத்தினர். முகாமிற்கு வந்திருந்தோரை இயற்பியல் துறை பேராசிரியர் கண்ணதாசன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் கல்லூரி அனைத்து துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் தியானப் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தியாகராஜன் செய்திருந்தார் முடிவில் பேராசிரியர் ராமதாஸ் நன்றி கூறினார்.

Tags

Next Story