சுரண்டை தேவாலயத்தில் கன்வென்ஷன் கூட்டம் !

சுரண்டை தேவாலயத்தில் கன்வென்ஷன் கூட்டம் !

கன்வென்ஷன் கூட்டங்கள்

ஆலங்குளம் அருகே சுரண்டை சிஎஸ்ஐ சீயோன் தேவாலயத்தில் லெந்து கால கன்வென்ஷன் கூட்டங்கள் இன்று நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை சிஎஸ்ஐ சீயோன் தேவாலயத்தில் லெந்து கால கன்வென்ஷன் கூட்டங்கள் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சேகர தலைவர் அருள்திரு ஜெபமணி தலைமை வகித்தார் சபை ஊழியர்கள் ஆசீர்,பால் செல்லத்துரை, மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை திருமண்டல செயலாளர் டிஎஸ் ஜெயசிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சென்னை மக்னாயீம் ஊழியங்கள் சகோ ஜான்சன் தாமஸ் சிறப்பு செய்தியளித்தார். இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story