ஓமலூரில் அதிமுக மா.செ தலைமையில் கூட்டம்

ஆத்தூரில் திமுக அரசை கண்டித்து இன்று நடக்கும் ஆர்பாட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடந்தது.
சென்னையில் பட்டியலின மாணவி மீது கொடூர தாக்குதல் நடத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகள் மற்றும் மருமகள் மீது கண்துடைப்பு நடவடிக்கையை கண்டித்தும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் தொடங்கப்பட்ட தலைவாசல் கால்நடை பூங்கா திட்டத்தை கிடப்பில் போட்டு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியதை கண்டித்தும், அந்த திட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு விலைவாசி, வீட்டு வரி, மின் கட்டணம், பால் விலை மற்றும் போதை பொருட்கள் அதிக நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற இன்று ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் மணி உள்ளிட்ட அதிமுக ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story