ராசிபுரத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனை செயல்வீரர்கள் கூட்டம்

ராசிபுரம் நகர காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனை மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனை மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் காந்தி மாளிகை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ராசிபுரம் நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் ஸ்ரீ ராமுலு ஆர் முரளி தலைமை வகித்தார். ராசிபுரம் காங்கிரஸ் கட்சி நகர மன்ற உறுப்பினர் லலிதா பாலு மற்றும் குருசாமிபாளையம் பேருராட்சி மன்ற உறுப்பினர் கந்தசாமி முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பி எ சித்திக் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார். மேலும் முன்னாள் நாமக்கல் மாவட்ட தலைவர் பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பாச்சல் சீனிவாசன், பங்கேற்று சிறப்புரை வழங்கினார். மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை கேட்டுபெற வேண்டும், வரும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வ பெருந்தகைக்கு வாழ்த்து தெரிவித்தும் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை பெற வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முடிவு படி ராகுல் காந்தி பிரதமர் ஆக வர அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும். தற்போது நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றி வரும் ஏகேபி சின்ராஜ்க்கு அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பது என்றும், கல்வி தந்தை காமராஜர் அவர்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் அவரது மார்பளவு சிலை வைக்க தமிழக அரசியிடம் கோரிக்கை வைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னால் மாவட்ட தலைவர் சீனிவாசன், ராசிபுரம் நகர்மன்ற உறுப்பினர் லலிதா பாலு, குருசாமிபாளையம் பேருராட்சி மன்ற உறுப்பினர் கந்தசாமி, உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story