தொழில் நிறுவனங்களிடம் சமூகப் பங்களிப்பு நிதி பெறுவது குறித்த கூட்டம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களிடம் சமூகப் பங்களிப்பு நிதி பெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் மாவட்டத்தில் இயங்கி வரும் தொழில் நிறுவனங்கள் தங்களுடைய சமூக பங்களிப்பு நிதியினை ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கல்வி சுகாதாரம் மற்றும் இதர அடிப்படை தேவை கட்டமைப்புகளை மேம்படுத்திட வழங்குவது குறித்து தொழில் நிறுவனருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story