பேராவூரணி அருகே மெகா ஆதார் முகாம் 

பேராவூரணி அருகே மெகா ஆதார் முகாம் 
ஆதார் முகாம்
பேராவூரணி அருகே மெகா ஆதார் முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் ஆவணம் கிளை மற்றும் இந்திய அஞ்சல் துறை இணைந்து நடத்தும் மெகா ஆதார் முகாம், வியாழக்கிழமை காலை 10 மணியளவில், மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்ஆ பள்ளிவாசலில் துவங்கியது.

பெரியநாயகிபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் வத்சலா முத்துராமன் முகாமை துவங்கி வைத்தார். இம்முகாமிற்கு, டிஎன்டிஜே தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆவணம் ரியாஸ் முன்னிலை வகித்தார். இம்முகாம் வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய மூன்று நாட்களுக்கு நடைபெறும்.

இதில் ஆதார் பெயர் திருத்தம்,முகவரி திருத்தம், புகைப்பட மாற்றம், மொபைல் எண் மாற்றம் உள்ளிட்ட திருத்தச் சேவைகள் நடைபெறுகிறது. இம்முகாமை ஆவணம் கிளை நிர்வாகி யூசுப் ஏற்பாடு செய்தார். நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பயனடைந்தனர்.

Tags

Next Story