அதிமுக தலைமையில் மெகா கூட்டணி - ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை

விருதுநகரில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தேர்தலுக்காக அதிமுகவின் வரவை எதிர்பார்த்து பல பேர் இருக்கிறார்கள், ஆனால் எடப்பாடியார் ஒரு முடிவு எடுத்து விட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது, அதிமுகவை நோக்கி பல கட்சிகள் வந்து கொண்டுள்ளன. அதிமுகவின் தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்றார்.

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.டி இராஜேந்திரபாலாஜி மற்றும் மாஃபா.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி இராஜேந்திரபாலாஜிக்கு தொண்டர்கள் மாலை அணிவித்து செங்கோல் மற்றும் வீரவாள் பரிசளித்தனர். பின்னர் 1000 க்கு மேற்பட்ட பெண் களுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர்கள் கே.டி. இராஜேந்திர பாலாஜி மற்றும் மாஃபா பாண்டியராஜன் வழங்கினர்.

பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் பொதுக்கூட்ட மேடையில் எம்ஜிஆர் பாடல் பாடி அசத்திய முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பெண்களுக்கு பாதுகாப்பான இயக்கம் அதிமுக தான் என்றார். அதிமுக கொண்டு வந்த திட்டங்களான தாலிக்கு தங்கம்,அம்மா உணவகம் மாணவர்களுக்கான லேப்டாப் போன்ற திட்டங்களை திமுக நிறுத்தி வருகிறது என குற்றம் சாட்டினார். மேலும் திமுக அரசு போதை மற்றும் கஞ்சாவை ஊக்கப்படுத்தி நவீன போதைப்பொருளை இந்தியாவின் 28 மாநிலங்களுக்கும் சப்ளை செய்து வருவதாகவும்,எதிர்கால தலை முறையை அழிக்கும் வேலையை திமுக செய்து வருகிறது என கடுமையாக விமர்சனம் செய்தார்.

பின்னர் பொதுகூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி இராஜேந்திரபாலாஜி தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர் களுக்கு ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் மற்றும் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சி அமைத்துள்ளனர் திமுகவினர் என்றார். மேலும் பேசிய கே.டி.இராஜேந்திர பாலாஜி மக்கள் நம்பக்கூடிய அளவிற்கு திமுக பொய் சொல்வதாகவும் மக்களை குழப்பி ஆட்சிக்கு வந்தது என்றார். மேலும் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனக் கூறிய திமுக அரசு அதிமுக கொண்டு வந்த திட்டங்களை மட்டும் தான் ஒரே கையெழுத்தில் நிறுத்தி வைத்து உள்ளது என்றார். மேலும் ஆட்சி மட்டும் தான் திமுக ஆட்சி நடக்கிறது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி சொன்னால் தான் அனைத்தும் நடக்கிறது. இல்லையென்றால் போராட்டம் நடத்துவார்கள் என பயந்து ஆட்சி நடக்கிறது.

மேலும் பேசிய கே.டி.இராஜேந்திர பாலாஜி பாரத பிரதமர் மோடி திருப்பூரில் பேசும் போது கூட எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களை போல் நல்லாட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என பேசிய பிரதமர் ஆகவே தமிழகத்தில் நல்லாட்சி நடத்தியவர்கள் அதிமுகவின் தலைவர்கள் என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள் என்றார். மேலும் பேசிய கே.டி.இராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் நீட் தேர்வு இல்லாத போது அரசுப்பள்ளி மாணவர்கள் 40 பேர்தான் மருத்துவ கல்லூரி சென்றனர். தற்போது 7.5% இட ஒதுக்கீடுக்கு பின்னர் ஆண்டிற்கு 600 பேர் மருத்துவம் படிக்கிறார்கள் என்றார்.

மேலும் வரும் தேர்தலுக்காக அதிமுகவின் வரவை எதிர்பார்த்து பல பேர் இருக்கிறார்கள் என்றார். ஆனால் எடப்பாடி யார் ஒரு முடிவு எடுத்து விட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது என்றார். அதிமுகவை நோக்கி பல கட்சிகள் வந்து கொண்டிருப்பதாகவும் அதிமுகவின் தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்றார்.வரும் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும் என்றார். மேலும் பேசிய கே.டி. இராஜேந்திர பாலாஜி திமுக ஆட்சியில் போதை பொருட்கள் கட்டுப்படுத்தப் பட வில்லை எனவும் போதை பொருட்களை திமுகவினரே கடத்தி வருகிறார்கள் என குற்றம்சாட்டினர் மேலும் பேசியகே.டி. இராஜேந்திர பாலாஜி இந்தியா கூட்டணி என்பது இந்தியாவை நாசப்படுத்ததான் எனவும் இந்தியா கூட்டணி என்பது வாரிசு கூட்டணி எனவும் அதிமுக கூட்டணி ஏழைப்பங்காளன் கூட்டணி என முன்னாள் அமைச்சர் கே டி இராஜேந்திரபாலாஜி பேசினார் பேசினார்.

Tags

Next Story