மேலப்புலியூரை மாற்றுத்திறனாளி வீரர் மாரத்தான் போட்டியில் வெற்றி

மேலப்புலியூரை மாற்றுத்திறனாளி வீரர்   மாரத்தான் போட்டியில் வெற்றி

வெற்றிபெற்ற வீரர்


மேலப்புலியூரை மாற்றுத்திறனாளி வீரர் வெள்ளக்கோவிலில் நடந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றார்.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ஐந்தாவது ஆண்டாக வெள்ளக்கோவில் மாரத்தான் போட்டி நடைபெற்றது, இதில், 3.5 கிலோமீட்டர் 5.5 கிலோமீட்டர், 10.5 கிலோமீட்டர், 21 கிலோமீட்டர் என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.

இதில் 21 கிலோமீட்டர் ஓட்டத்தை காங்கேயம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தானகிருஷ்ணசாமி போட்டியை தொடக்கி வைத்தார், 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு போட்டியில் பெரம்பலூர் ஒன்றியம் மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கலைச்செல்வன் கலந்து கொண்டு ஓடினார்.

இரண்டு மணி நேரம் 10 நிமிடத்தில் 21 கிலோமீட்டர் ஓடி சாதனை படைத்த மாற்றுத்திறனாளி கலைச்செல்வனுக்கு பாராட்டு சான்றிதழ் பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அவருக்கு அங்குள்ள அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் தொடர்ந்து இன்று மலை பெரம்பலூர் வந்த அவருக்கு சமூக அலுவலர்கள் உறவினர்கள் நண்பர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story