மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு.

அங்காளம்மன் கோவில் உண்டியல் பணம்

அங்காளம்மன் காணிக்கை வசூல் ரூ.14 கோடி என தகவல்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள உண்டியல் மாதம்தோறும் திறக்கப்பட்டு, அதில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.

அந்த வகையில், நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் அறங்காவலர்கள் குழுவினர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.1 கோடியே 11 லட் சத்து 96 ஆயிரத்து 281 ரொக்கம், 442 கிராம் தங்கம், 145 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அப்போது வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story