மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பதவி ஏற்பு

மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பதவி ஏற்பு

சையத் முகமது

மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களாக சிவசண்முகம், சையத்முகமது ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணியாற்றி வந்த குலோத்துங்கன், சரவணக்குமார் ஆகியோர் பதவி உயர்வு பெற்று பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து வானூரில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த சிவசண்முகம் பதவி உயர்வு பெற்று மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி (வட்டார ஊராட்சி) அலுவலராக நியமனம் செய்யப்பட்டார். இதேபோல் செஞ்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த சையத்முகமது பதவி உயர்வு பெற்று மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலராக நியமனம் செய்யப் பட்டார். இதையடுத்து சிவசண்முகம், சையத்முகமது ஆகியோர் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். அப்போது அவர்களுக்கு துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story