எம்பி சீட் கேட்டு விருப்பமனு அளித்த மேலூர் கவுன்சிலர்

எம்பி சீட் கேட்டு விருப்பமனு அளித்த மேலூர் கவுன்சிலர்

விருப்ப மனு அளிப்பு

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக அலுவலகத்தில் மேலூர் கவுன்சிலர் விருப்ப மனு அளித்தார்.

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அதிமுக அலுவலகத்தில் விருப்ப மனு அளித்த மேலூர் அதிமுக நகரமன்ற உறுப்பினர். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது விருப்ப மனுக்களை கட்சி தலைமை அலுவலகத்தில் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மேலூரைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் அவர்களின் மகனும் மேலூர் அதிமுக நகர்மன்ற உறுப்பினருமான திவாகர் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டி விருப்ப மனு அளித்தார்.

Tags

Next Story