வெறி நாய்களால் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல்

வெறி நாய்களால் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் சுற்றுவட்டார பகுதியிகளில் வெறிநாய்கள் ஆடுகளை கடித்து கொள்வதோடு மனிதர்களையும் அச்சுறுத்துவதால் உரிய நடவடிக்கை எடுக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆவுடையார்கோவில் தாலுகா திருப்பெருந்துறை ஊராட்சி மற்றும் புண்ணியவயல் ஊராட்சி பகுதிகளில் பெருமளவு சுற்றித் திரியும் தெருநாய்கள் மற்றும் வெறிநாய்களால் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. கூட்டமாக வரும் நாய்கள் ஆடுகளை கடித்து கொன்று தின்றும் விடுகிறது.

ஆட்டை காப்பாற்ற ஓடும் ஆட்டின் உரிமையாளரையும் விரட்டுகிறது. ஒரு ஆட்டை கொன்று தின்றதுபோக இரு கால்கள் மட்டுமே மிச்சம் மற்றொரு ஆட்டை கொன்று போட்டது. இதனை கருத்தில் கொண்டு துறை சார்ந்த அதிகாரிகள் உடனேயே துரித நடவடிக்கை எடுக்க பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story