பழவூரில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மரணம்

பழவூரில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மரணம்

னநிலை பாதிக்கப்பட்ட பெண் மரணம்

பழவூர் அருகே வேன் மோதி மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மரணம் - போலீசார் விசாரணை
அருமனையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மனைவி ஞானபால் (58).இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்.இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழவூர் அருகே சாலை ஓரங்களில் சுற்றித்திரிந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கலைஞர் நகர் பைபாஸ் சாலையில் சென்றபோது அவர் மீது வேன் மோதி காயம் அடைந்தார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இது குறித்து பழவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story