வணிகர் சங்க மாநாடு - நெல்லையில் கடைகள் அடைப்பு

வணிகர் சங்க மாநாடு - நெல்லையில் கடைகள் அடைப்பு

பைல் படம் 

மதுரையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக இன்று மாநாடு நடப்பதையொட்டி நெல்லையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
வணிகர்கள் தினம் இன்று (மே 5) கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மதுரையில் இன்று மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதியில் உள்ள பல்வேறு கடைகள் காலை முதல் அடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பொருட்களை வாங்குவதற்கு அவதி அடைந்து வருகின்றனர். இவ்வாறு கடை அடைக்கப்பட்டுள்ளதால் பஜார் பகுதியில் வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags

Next Story