மேட்டூர் : பட்டியில் வைத்த விளக்கால் தீ விபத்து - 11 ஆடுகள் பலி

மேட்டூர் : பட்டியில் வைத்த விளக்கால் தீ விபத்து - 11 ஆடுகள் பலி

தீ விபத்து ஏற்பட்ட ஆட்டு பட்டி 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூர் மூலக்கடை பகுதியைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (55). கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு மாலை வழக்கம் போல சக்திவேல் என்பவருக்கு சொந்தமான ஆட்டு பட்டியில் அடைத்துள்ளார். இந்நிலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நேற்று இரவு ஆட்டு பட்டியில் விளக்கேற்றி விட்டு செல்லம்மாள் வீடு திரும்பி உள்ளார். அப்போது பலமாக காற்று வீசியதால் விளக்கில் இருந்த தீப்பொறி ஆட்டு பட்டியில் பட்டு மள மளவென தீ பிடித்து எரிய தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படை வீரர்கள் வருவதற்குள் ஆட்டு பட்டி முழுவதும் தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்தில் செல்லம்மாள் என்பவருக்கு சொந்தமான 10 ஆடு மற்றும் தனம் என்பவருக்கு சொந்தமான ஒரு ஆடு என மொத்தம் 11 ஆடுகள் பலியானது. மேலும் காயம் அடைந்த ஆடுகளுக்குக் கால்நடை மருத்துவர்மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்தில் 11 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags

Next Story