மேட்டூர் அணை நிலவரம் : நீர்மட்டம் 47 அடியாக உயர்வு..!

மேட்டூர் அணை நிலவரம் :  நீர்மட்டம் 47 அடியாக உயர்வு..!

மேட்டூர் அணை நீர்மட்ட நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரத்தில் படிப்பாக அதிகரித்துவந்த நிலையில், இன்று அணையின் நீர்மட்டம் 47 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 7 நாட்களில் 10 அடி அளவுக்கு உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 120 அடி. மொத்தம் நீர் இருப்பு 93 டிஎம்சி. மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்ததால், டெல்டா பாசத்திற்கான நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் கடந்த ஏழு நாட்களில் அணையின் நீர்மட்டம் 10 அடி அளவுக்கு உயர்ந்து, இன்று 47 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 16 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Tags

Next Story