மேட்டூர் : ஜலகண்டாபுரத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்.

மேட்டூர் : ஜலகண்டாபுரத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்.

சாலை மறியல் 

மேட்டூர் அருகே ஜலகண்டாபுரத்தில் குடிநீர் விநியோகிக்ககோரி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேட்டூர் அருகே ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட சவுரியூர், ஆவடத்தூர், சத்யா நகர் ,கரட்டுப்பட்டி, கட்டி நாயக்கம்பட்டி, ராஜகோபால் தெரு பகுதிகளுக்கு பூலாம்பட்டி காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் முறையாக வழங்கவில்லை.குடிநீர் வினியாகம் தடை ப்பட்டதால் பல்வேறு இன்னல்களை கிராம மக்கள் சந்தித்து வந்தனர்.

இது குறித்து கிராம மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து 50 - கும் மேற்பட்ட பெண்கள் காலி குடகளுடன் கட்டிநாயக்கன்பட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக ஜலகண்டாபுரம் எடப்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் அதிகாரிகள் சாலை மறியல் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story