எம்ஜிஆர் 36 வது நினைவு நாள்- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மரியாதை

எம்ஜிஆர் 36 வது நினைவு நாள்- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மரியாதை
மரியாதை செய்த முன்னாள் அமைச்சர் 
எம்ஜிஆர் 36 வது நினைவு நாளை ஓட்டி அவரது சிலைக்கு முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

எம்ஜிஆர் 36 வது நினைவு நாள்-எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய செல்லூர் ராஜு! அதிமுகவின் நிறுவனத் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 36 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அதிமுக மூத்த உறுப்பினர்கள் எம் ஜி ஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு அதிமுகவின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான செல்லூர் ராஜு தலைமையில் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் மதுரை மாநகர் முக்கிய பொறுப்பாளர்கள் எம் எஸ் பாண்டியன், டாக்டர் சரவணன்,அதிமுக பொருளாளர் ராஜா உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இன்று அன்னதானம் வழங்கப்பட்டது

Tags

Next Story