எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

 நத்தம் பஸ் நிலையம் அருகில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 107 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நத்தம் பஸ் நிலையம் அருகில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 107 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பஸ் நிலையம் அருகில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 107 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது .இதற்கு மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளரும், நத்தம் ஒன்றியக்குழு தலைவருமான கண்ணன் தலைமை தாங்கி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாக்கவுண்டர், பார்வதி, பண்ணுவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆண்டிச்சாமி, அவைத் தலைவர்கள் பிறவிக் கவுண்டர், சேக்ஒலி,நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராமமூர்த்தி, உள்ளிட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story