எம்ஜிஆர் பிறந்த நாள் : அமமுக சார்பில் மரியாதை

எம்ஜிஆர் பிறந்த நாள் : அமமுக சார்பில் மரியாதை

எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடியில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் பிரைட்டர் தலைமையில் வர்த்தக அணி இணைச் செயலாளர் மற்றும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாக்கிய செல்வன், மாவட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் செல்வராஜ் ஆகியோரின் முன்னிலையில் பழைய முனிசிபல் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் தங்க மாரியப்பன், மாவட்ட பொருளாளர் முனியசாமி, பொதுக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி, மாவட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் (பொறுப்பு) மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திருமலைத்தங்கம், மாவட்ட இதய தெய்வம் அம்மா பேரவை செயலாளர் முத்துமாலை, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மருது பாண்டி, மாவட்ட மீனவரணி செயலாளர் செவனர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வீரபுத்திரன், மாவட்ட சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் தாமஸ் ஜோவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story