மாவட்ட நிர்வாகம் சார்பில் எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மாவட்ட நிர்வாகம் சார்பில் எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி சேலம் அண்ணா பூங்கா வளாக மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதவி கலெக்டர் அம்பாயிரநாதன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் தாமோதரன், துணை தாசில்தார் நாகூர்மீரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story