எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: அண்ணாமலையை விமர்சித்த முனுசாமி

ஊத்தங்கரையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், பாஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்து அதிமுக., துணை பொதுச் செயலாளர் முனுசாமி பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி அதிமுகவின் சார்பில் இரவு ரவுண்டானாலில் 107வது எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுகவின் கழக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி, "எம்ஜிஆர் அவர்கள் தமிழக மக்களின் இதயத்தில் என்றும் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவர் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அதிமுக ஆட்சி செய்து வருகிறது. 41 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் நலன் கருத்தில் கொண்டு ஆட்சி செய்த கட்சிதான் அதிமுக" என்று கூறினார்.

மேலும், "பாஜக அண்ணாமலை அவர்கள் தமிழகத்திற்கு எதிரான கருத்துக்களை கூறி வருகிறார். தமிழகத்தில் இருக்கும் அரசியல் சித்தாந்தம் வேறு, வடமாநில அரசியல் சித்தாந்தம் வேறு. தமிழகத்திற்கு ஏற்ற அரசியல் சித்தாந்தத்தை அதிமுக பின்பற்றுகிறது" என்று விமர்சித்தார். இந்த நிகழ்வில் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ தமிழ்செல்வம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story