எம்ஜிஆர் நினைவு தினம்: அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

எம்ஜிஆர் 36ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 36 ஆம் ஆண்டு நினைவு முன்னிட்டு பாரத் ரத்னா புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அதிமுக நகர தெற்கு பகுதி செயலாளர் எஸ். ஏ.எஸ். சேட்டு என்ற அப்துல் ரகுமான் தலைமையில், நகர வடக்கு பகுதி செயலாளர் பாஸ்கர் முன்னிலையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், வடக்கு மாவட்ட கழக செயலாளர் டாக்டர் .சி .விஜயபாஸ்கரின், வழிகாட்டுதலின்படி புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருவருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலைய வரை அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது .பின்னர் புதுக்கோட்டை நகர வடக்கு பகுதி செயலாளர் எஸ் .ஏ.எஸ் சேட்டு என்ற அப்துல் ரகுமான் தலைமையில், தெற்கு பகுதி செயலாளர் பாஸ்கர் முன்னிலையில், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், கழக பொறுப்பாளர்கள் தொண்டர்கள், மகளிர் அணி யினர், என ஏராளமான கலந்து கொண்டு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags

Next Story